ரத்தன் டாடாவின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. மும்பையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வருமானத்தில் பெரும் பகுதியை மனிதநேய செயற்பாடுகளுக்கு வழங்கியவர் ரத்தன் டாடா. ஒரு லட்சம் ரூபாய்க்கு காரை அறிமுகம் செய்து நடுத்தர வர்க்க மக்களின் கனவை நனவாக்கியவர்.