About us

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை துவக்கம்!!

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு நேற்று முதல் மீண்டும் விமான போக்குவரத்து துவங்கியது.

சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்கும், மத்திய அரசின், ‘உதான்’ திட்டத்தின் கீழ், 2017ம் ஆண்டு ஆகஸ்ட்டில், புதுச்சேரியில் இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், ஹைதராபாதுக்கு விமான போக்குவரத்தை துவக்கியது. பின், பெங்களூருக்கு விமான சேவை தொடங்கியது. கொரோனா காலத்தில், விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.