About us

கச்சா எண்ணெய் விலை 110 டாலரை தொட்டது…

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று அதிகாலை ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 108 அமெரிக்க டாலராக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் உயர்வு ஏற்பட்டது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 110 டாலராக அதிகரித்தது. அதன் காரணமாக சர்வதேச அளவில் எல்லா நாடுகளிலும் பெட்ரோல்-டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலை 110 டாலராக உயர்ந்து இருப்பதால் இந்தியாவிலும் பெட் ரோல்-டீசல் விலையை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே கச்சா எண்ணை விலை உயர்வால் ஏற்படும் பொருளாதார மாற்றங்களை சரிகட்டுவதற்காக அவசரகால கையிருப்பை எடுப்பதற்கு சர்வதேச எரிசக்தி முகமை நாடுகள் முடிவு செய்துள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.