About us

மொழித் தடையை தொழில்நுட்பம் மூலம் தகர்க்கும் சீனர்கள்

பெய்ஜிங்: பல்வேறு நாட்டினர் பங்கேற்றுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உலக மக்களுடன் ஹைடெக் செயலிகள், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் மூலம் மொழித் தடையை தகர்த்து அவர்கள் மொழியில் பேசுகின்றனர்.

பிப்ரவரி 4 தொடங்கி 20ம் தேதி வரை பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளுக்காக இங்கு முதல் முறையாக நூறு சதவீத செயற்கை பனியை உருவாக்கியுள்ளனர். இந்தியாவிலிருந்து பனிச்சறுக்கு வீரர் ஆரிப் கான் மட்டும் ஒற்றை வீரராக குளிர்கால ஒலிம்பிற்கு தகுதிப் பெற்றார். பிப்.,13ல் நடந்த போட்டியில் பதக்கத்தை தவறவிட்டவர், நாளை (பிப்., 16) நடைபெறும் போட்டியில் பங்கேற்கிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.