Month: January 2022

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்:

ரேஷன் கடை பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வை நிறுத்தி வைக்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சாந்தினி.

மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து:

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாவது கட்ட சோதனைக்கு மத்திய அரசு அனுமதி. இரண்டு கட்ட சோதனைகளில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில், மூன்றாவது கட்ட சோதனைக்கு அனுமதி.அடுத்தகட்டமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முடிவை அரசு எடுக்கும் என…

வேலுநாச்சியார், மருது சகோதரர்களை வரவேற்ற மதுரை!!

வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் அடங்கிய குடியரசு தின அலங்கார ஊர்தியை மதுரை மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.பொதுமக்கள் பெருந்திரளாக பார்வையிட்டு பயன்பெறுகின்ற வகையில் நகரின் முக்கியப் பகுதிகளில் இவ்வூர்திகள் காட்சிப்படுத்தப்படும். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன்.

சபாநாயகர் அப்பாவு நில அபகரிப்பு வழக்கு:

வழக்கின் நிலை குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு. பெருங்குடி கிராமத்தில் 10 செண்ட் நிலத்தை ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக புகார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் ராஜேந்திரன்.

மியூசியமாக மாறும் ஐஎன்எஸ் குக்ரி போர்க்கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் குக்ரி கப்பல் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து டையூ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஒரு முழு மியூசியமாக மாற்றப்படவுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுதாகர்.

கே.பி.பார்க் கேஸ்..

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பை பி.எஸ் டி. நிறுவனம் தரமற்ற முறையில் கட்டியதாக தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்கும் என்றும், சமரச மையம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர் சையது.

கர்ப்பிணிகளுக்கு காலாவதியான ஊட்டச்சத்து பொருள்!!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு காலாவதியான மருந்து பொருட்கள் விநியோகம். பெண்கள் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனை – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.

பெண் காவலர்கள் பணி நேரம் குறைப்பு!

மகாராஷ்டிரா முழுவதும் பெண் காவலர்கள் 12 மணி நேரத்துக்குப் பதிலாக 8 மணி நேரம் மட்டுமே பணியில் இருக்க வேண்டும் என்று அம்மாநில காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) சஞ்சய் பாண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் பாண்டி.

இன்று மெகா தடுப்பூசி முகாம்….

20ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிது. இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசியும், இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும்…

இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து!

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கை விலக்கிக் கொள்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது மேலும், 28-01-2022 முதல், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்…