விளையாட்டு பகுதி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் 3-வது டெஸ்ட் போட்டி

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் எடுத்தன. இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இந்தியாவுக்கு 407 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி இன்று 5வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 41 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 73 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அதன்பின்னர் தொடர்ந்து ஆடிய புஜாரா, டெஸ்ட் போட்டிகளில் 27வது அரை சதத்தை நிறைவு செய்தார். 

செய்தியாளர் ரகுமான்