செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் திரு/
மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி கொரோனா வைரஸ் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை எடுத்து வருகிறது.

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி MLA, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவுரையில், செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி ஆலோசனையில் பம்மல் நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் பம்மல் சாலையில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் சுகாதார ஆய்வாளர் திரு/
சுந்தராஜன் தலைமையில் பம்மல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் திருமதி/எஸ்தர் முன்னிலையில் பொதுமக்களுக்கும் சாலையில் செல்பவர்களுக்கும் மற்றும்
அரசுபேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கும் கபசர குடிநீர் தன்னார்வ தொண்டு இளைஞர்களால் வழங்கப்பட்டது.
உடன் தன்னார்வ குழுவின் தலைவர் திரு/ பொன்ராஜ் மற்றும் தன்னார்வ தொண்டு குழு இளைஞர்கள் உடன் இருந்தனர்.

நியூஸ்: S.MD.ரவூப்

About The Author