விருதுநகர் – மாவட்டம் (அருப்புக்கோட்டை – தாலுகா) பாளையம்பட்டி – கிராமத்தில் அமைந்துள்ள சர்ச் தெருவில் ஒரு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ள பகுதியில் பத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள் அனைவரும் எவ்வித வருமான வாய்ப்பும் இன்றி கஸ்ட ஜீவனத்தில் தவித்து வருகின்றனர், இருக்க நல்ல இடம் கூட கிடையாது , மின் இணைப்போ, வசதியோ கிடையாது, இந்த இடத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். அதில் சிலருக்கு குடும்ப அட்டை மற்றும் அரசு உதவிகள் ஏதுமின்றி தவித்து வருகின்றனர். மேலும் இவர்கள் பொது கழிப்பிடத்திற்கு பின் புறமாக வசித்து வருகின்றனர், அங்கு பயன்படுத்தப்படும் கழிவு நீர் அனைத்தும் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே தேங்கி நிர்க்கிறது. மேலும் மழை நேரங்களில் மழை நீர் வேறு எங்கும் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிர்க்கிறது, இதனால் அவர்கள் பல சுகாதார மற்றும் சுற்றுப்புற சீர் கேடுகளுக்கு ஆளாகி உள்ளனர், ஆகவே இவர்கள் படும் துயரை தங்கள் முன்பு கொண்டு வந்துள்ளோம் , தாங்கள் கருணை கூர்ந்து இவர்களும் நமது சமூகத்தில் நல் வாழ்வு வாழ வழிவகை

செய்யுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிவன்புடன் வேண்டிகிறோம்

பொதுமக்கள் சார்பாக

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள

த.விஜய் பாண்டியன்
வழக்கறிஞர் / சமூக சேவகர்
பாளையம்பட்டி – கிராமம்
cell: 8124810069

வே.சஞ்சய் குமார் , B.Com
சமூக சேவகர்
பாளையம்பட்டி – கிராமம்
cell:9047224665

வ.கணேசன் ITI
சமூக சேவகர்
பாளையம்பட்டி – கிராமம்
cell: 9597141337

About The Author