கொடைக்கானலில் கடந்த 2 மணி நேரமாக பெய்த கனமழையால் ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது. கனமழை காரணமாக அவ்வப்போது ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அண்ணாசாலை, ஏரி சாலை, மோயர் சதுக்கம், பைன் மரக்காடு, குணா குகை உள்ளிட்ட பகுதிகளில் காலையிலிருந்தே மழை பெய்து வருகிறது

About The Author